1. தில்லைவாழ் அந்தணர்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 01
இறைவன்: திருமூலட்டானேஸ்வரர்
இறைவி : சிவகாமியம்மை
தலமரம் : தில்லை
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சிதம்பரம்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை முதல் நாள்
வரலாறு : தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவர் என்று குறிப்பிடப்படுவர். இவர்கள் தில்லை நடராஜப்பெருமானுக்கு வழிபாடுகள் புரிந்து வந்த திருக்கயிலையைச் சார்ந்த சிவகணத்தவர்கள். ஞானம், தவம், தானம், மானம் மற்றும் பொறையும் அமையப்பெற்றவர்கள் என்பார் சேக்கிழார் பெருமான்.
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. சீனு அருணாசலம்
18/16 சின்னக் கடைத்தெரு
சிதம்பரம்
தொலைபேசி : 04144-231166

இருப்பிட வரைபடம்


ஞானமே முதலா நான்கும் நவையறத் தெரிந்து மிக்கார்
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார் 
- பெ.பு. 356
பாடல் கேளுங்கள்
 ஞானமே முதலா


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க